வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு!

Published

on

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Legal Cum Probation Officer & Assistant cum Data Entry Operator

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LLB முடித்தவராகவும் பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு/அரசு சாரா நிறுவனம்/ சட்டம் சார்ந்த இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். மேலும் தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior Level) முடித்திருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.13,240/- முதல் ரூ.27,804/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://coimbatore.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர் – 641 018.

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1

அறிவிக்கைகள்2

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version