வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை!

Published

on

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 573. இதில் கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் தட்டச்சர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 573

வேலை:Computer Operator
காலியிடங்கள்: 76
மாத சம்பளம்: ரூ.20,600 – 65,500
கல்வித்தகுதி: Computer Scice, Computer Application பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Computer Application -இல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் உயர்நிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Typist
காலியிடங்கள்: 229
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000
கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சில் உயர்நிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Office Automation -இல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வாய்ப்பில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.mhc.tn.gov.in என்ற இணையதளம் அல்லது https://www.mhc.tn.gov.in/recruitment/docs/126_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.07.2019

seithichurul

Trending

Exit mobile version