வேலைவாய்ப்பு
அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐசி) வேலை!
மத்திய அரசு நிறுவனமான அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐசி) காலியிடங்கள் உள்ளது. இதில் உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் வேலைகளை ஓப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு முழுவதும்
நிறுவனம்: அரசு ஊழியர் காப்பீட்டு நிறுவனம் (ESIC)
வேலை: Assistant Engineer
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாத சம்பளம்: ரூ. 45,000
வேலை: Junior Engineer
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம், பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாத சம்பளம்: ரூ.33,630
வயது: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பாக 64க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வில் வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Additional Commissioner and Regional Director, ESI Corporation, Regional Office, 143, Sterling Road, Nungambakkam, Chennai – 34
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.esic.nic.in/attachments/recruitmentfile/ce28d0948724efaaf1a6323864209fd7.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 22.11.2019