வேலைவாய்ப்பு

நீதிமன்றங்களில் வேலை!

Published

on

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழ்நாடு அமைச்சுப்பணி மற்றும் அடிப்படைப் பணிகளில் காலியிடங்கள் 156 உள்ளது. இதில் (தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும்) வேலைக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 156

வேலை மற்றும் காலியிடங்களுக்கான விவரம்:

வேலை: ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுக் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000

வேலை: முதுநிலை கட்டளை தாரர்
காலியிடங்கள்: 10
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000

வேலை: ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டர்
காலியிடங்கள்: 13
மாத சம்பளம்: ரூ.16,600 – 52,400
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டர் பட்டப்படிப்புடன் 2 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: இளநிலை கட்டளை தாரர்
காலியிடங்கள்: 28
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.19,000 – 60,300

வேலை: பதிவுரு எழுத்தர்
காலியிடங்கள்: 17
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,900 – 50,400

வேலை: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 49
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000

வேலை: மசால்சி, வாட்ச்மேன், இரவுக்காவலர், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், மசால்சி- முழு நேரப்பணி, சுகாதாரப் பணியாளர்
காலியிடங்கள்: 37
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 01.05.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதிக்கு மேற்பட்ட தகுதி பத்தர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/tiruppur என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து உரிய இடங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டுக் கையொப்பத்துடன் அனைத்துக் கல்வி, ஜாதி, முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சான்றிதழ்களின் நகல்கள் உரியச் சான்றொப்பமுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் – 641 602.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20for%20recruitment%20of%20various%20posts%20in%20Tiruppur%20District%20By%20PDJ%20Court%20-%20Tamil%20Version_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.06.2019

Trending

Exit mobile version