வேலைவாய்ப்பு

திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியில் வேலை!

Published

on

தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியிடங்கள் 27 உள்ளது. இதில் கணினி இயக்குநர், வடிவமைப்பாளர், இளநிலை எழுத்தர், விற்பனையாளர் போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 27

வேலை செய்யும் இடம்: தஞ்சாவூர்

வேலை: கணினி இயக்குநர் – 01
வேலை: வடிவமைப்பாளர் – 01
மாத சம்பளம்: ரூ.5,800 – ரூ.32,970 + ரூ.1,500

வேலை: இளநிலை எழுத்தர் – 08
வேலை: விற்பனையாளர் நிலை II – 15
மாத சம்பளம்: ரூ.4,900 – ரூ.27,800 + ரூ.1,200

வேலை: அலுவலக உதவியாளர் – 02
மாத சம்பளம்: ரூ.4,000 -ரூ.19,360 + ரூ.900

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் பி.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிக்கு உச்சபட்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் கூடுதலாகச் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., இசட் 322, நெ 55 சன்னதி தெரு, திருபுவனம்-612103 தஞ்சாவூர் மாவட்டம் என்ற முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பப் படிவத்தினைப் பெறுவது போன்ற முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cooptex.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 31.10.2019

seithichurul

Trending

Exit mobile version