வேலைவாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!

Published

on

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியிடங்கள் 05 உள்ளது. இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூகப்பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நாமக்கல்

மொத்த காலியிடம் : 05

வேலை: உதவியாளர் மற்றும் கணின தட்டச்சுச் செய்பவர் ஆப்ரேட்டர் -03
மாத சம்பளம்: ரூ.10,000
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, டிசிஏ முடித்து ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: சமூகப்பணியாளர் – 01
கல்வித்தகுதி: சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல் போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாத சம்பளம்: ரூ.14,000
வயது: 40 வரை இருக்க வேண்டும்.

வேலை: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் – 01
கல்வித்தகுதி: சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ப்பு, குற்றவியல், கல்வியியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வரை இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.21,000

விண்ணப்பிக்கும் முறை: https://namakkal.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 78/A, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் ரோடு, நாமக்கல் – 637 001.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/02/2020021339.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.02.2020

seithichurul

Trending

Exit mobile version