வேலைவாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியிடங்கள் 05 உள்ளது. இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூகப்பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
நிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நாமக்கல்
மொத்த காலியிடம் : 05
வேலை: உதவியாளர் மற்றும் கணின தட்டச்சுச் செய்பவர் ஆப்ரேட்டர் -03
மாத சம்பளம்: ரூ.10,000
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, டிசிஏ முடித்து ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வேலை: சமூகப்பணியாளர் – 01
கல்வித்தகுதி: சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல் போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
மாத சம்பளம்: ரூ.14,000
வயது: 40 வரை இருக்க வேண்டும்.
வேலை: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் – 01
கல்வித்தகுதி: சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ப்பு, குற்றவியல், கல்வியியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வரை இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.21,000
விண்ணப்பிக்கும் முறை: https://namakkal.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 78/A, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் ரோடு, நாமக்கல் – 637 001.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/02/2020021339.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.02.2020