வேலைவாய்ப்பு

நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் வேலை!

Published

on

நிலக்கரி சுரங்க நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட மாநிலத்தில் காலியிடங்கள் 57 உள்ளது. இதில் கணக்காளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Cost Accountant/Accountant

காலியிடங்கள்: 57

மாத சம்பளம்: ரூ.37,063.41

வயது: 01.04.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை கோருபவருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: ஐ.சி.டபிள்யூ.ஏ அல்லது சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.500. இதனைப் பாரத ஸ்டேட் வங்கிக் கணக்கு எண்: 35228997799 என்ற எண்ணில் டெப்பாசிட் செய்ய வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.easterncoal.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.easterncoal.gov.in/notices/recruitment/20191001acct.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.10.2019

seithichurul

Trending

Exit mobile version