வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வேலை!

Published

on

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியிடங்கள் 45 உள்ளது. கம்பியூட்டர் ஆப்ரேட்டர் (தற்காலிக வேலை) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 45

வேலை: Computer Operator

கல்வித்தகுதி: Computer Science, Computer Application போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கம்பியூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு ஆணை மற்றும் விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

மாத சம்பளம்: ரூ. 20,600 – 65,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/tirunelveli என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து சுய சான்றொப்பமிட்டுத் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி – 627 002

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://districts.ecourts.gov.in/sites/default/files/%20Notification%20for%20the%20post%20of%20computer%20operator%20dt%2002%2005%202019_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.05.2019

Trending

Exit mobile version