வேலைவாய்ப்பு
இந்திய விமான நிறுவனத்தில் வேலை! உடனே விண்ணப்பியுங்கள் – இன்றே கடைசி நாள்
”கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அண்ட் அல்லைடு சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்’. நிறுவனத்தின் சென்னை விமானத் தளத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 176. இதில் செக்யூரிட்டி பெர்சனல் மற்றும் எக்ஸ்ரே ஸ்கிரீனர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இன்றைக் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 176
வேலை: செக்யூரிட்டி பெர்சனல்
வேலை: எக்ஸ்ரே ஸ்கிரீனர்
கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் இந்தி, ஆங்கிலம் மற்றும் மண்டல மொழியறிவு பெற்றிருக்க வேண்டும். விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது: 01.06.2019 தேதியின்படி 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் உறுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டுத் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விமானதளப் பாதுகாப்புத் தொடர்பான சான்றிதழ் பெற்றவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.aaiclas.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.aaiclas.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.06.2019