வேலைவாய்ப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை!

Published

on

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், சமூகப் பாதுகாப்பு உதவியாளர் வேலைக்கான ஆன்லைன் எழுத்துத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Social Security Assistant

காலியிடங்கள்: 2189

மாத சம்பளம்: ரூ.25,500

வயது: 21.07.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வு நிலை I, நிலை II என இரு நிலைகளாக நடைபெறும்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.epfindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_Recruit_SSA_109.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.07.2019

Trending

Exit mobile version