சினிமா செய்திகள்

‘ஜித்தன்’ ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்.

Published

on

நானும் ரவுடிதான் படத்தில் நடிகை நயன்தாரா, படத்தின் வில்லன் பார்த்திபனை பார்த்து பேசும் ‘ஒங்கள போடணும் சார்’ வசனம் பிரபலமாக பேசப்பட்டது. இயக்குநர் கெளதம் மேனன் இந்த வசனத்தை குறிப்பிட்டு, நயன்தாராவுக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஸிக்மா பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஒங்கள போடணும் சார் என வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஜித்தன் ரமேஷ் உடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா,

அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களை கிண்டல் கேலி செய்வதை பார்த்திருப்போம்.. மாறாக, இந்த படத்தில் பெண்கள், ஆண்களை கிண்டல் செய்வதும் கலாய்ப்பதும் புதிய அனுபவமாக இருக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்சியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப்படம் நிச்சயமாக ஜித்தன் ரமேஷ்க்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என இயக்குநர்கள் தெரிவித்தனர்.

seithichurul

Trending

Exit mobile version