தமிழ்நாடு
நகைக்கடன் தள்ளுபடி அரசாணை எப்போது? அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்!
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும், திமுக தனது தேர்தல் அறிக்கையை கூறிய பல வாக்குறுதிகளை இந்த ஆறு மாதத்தில் நிறைவேற்றி உள்ளது என்பதும் தெரிந்ததே.
மேலும் 6 மாத கால ஆட்சிக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி என்பதும் ஒன்று. இது குறித்த அறிவிப்பு விரைவில் அரசிடம் இருந்து வெளிவரும் என்று கூறப்பட்டதை அடுத்து தமிழக அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசாணை விரைவில் வெளியிடப்படும் என ஐ பெரியசாமி அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஏற்கனவே கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே முதல்வர் அறிவித்துள்ள நிலையில் அதற்கான அரசாணை இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூட்டுறவுத் துறை செயலாளர் மற்றும் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும், அதாவது தீபாவளிக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளி வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறிப்பு இன்னும் ஒரு வாரத்தில் அரசாணை வெளியாகும் என்ற தகவல் அந்த வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.