தமிழ்நாடு
‘ஏசு நாதரை சுட்டது கோட்சேங்க..!’- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ‘குபீர்’ பேச்சு
ஏசு நாதரை சுட்டது கோட்சே என்று ‘குபீர்’ ரக கருத்தைத் தெரிவித்திருக்கிறார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், ‘அம்மா மினி கிளினிக்’ திறந்துவைத்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும் போது, இப்படியான கருத்தைக் கூறினார் அமைச்சர் சீனிவாசன். அவர் பேசுகையில், ‘பொங்கல் பரிசு, 2,500 ரூபாயை அதிமுக அரசு கொடுத்தா தப்புன்றாங்க. முதலமைச்சர் அறிவிச்சாரு. அதை அமைச்சர்கள் செயல்படுத்தி வர்றாங்க. 2,500 ரூபாயோட வேட்டி, சேலைனு எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தா மூவாயிரம் ரூபாய் வரும். இது மக்களுக்கான நலத்திட்ட உதவி. இதை நாங்க செஞ்சா திமுக, தப்பு தப்புனு சொல்றாங்க. அவங்க செஞ்சிருந்தா சரியா இருந்திருக்கும். அவங்க இந்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தா புத்தரோட வாரிசுனு சொல்லியிருப்பாங்க. இப்ப நாங்க செஞ்சதால ஏசுநாதரை சுட்ட கோட்சே வாரிசுனு சொல்வாங்க’ என்று பேசி முணுமுணுக்க வைத்துள்ளார் சீனிவாசன்.
தேசப் பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றதுதான் நாதுராம் கோட்சே என்பவர். ஏசு நாதரை யாரும் சுட்டுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.