இந்தியா

ஏப்ரல் 21ல் தொடங்கவிருந்த ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு தேதி ஒத்திவைப்பு!

Published

on

ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்க இருந்த ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜே.ஈ.ஈ இரண்டாம் கட்ட தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

ஏப்ரல் 21, 24, 25, 29 மற்றும் மே 1, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ஜே.ஈ.ஈ முதல் கட்ட மெயின் தேர்வு வரும் ஜூன் 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெறும்.

அதேபோல வரும் மே 24 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வு, வரும் ஜூலை 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும்.

இந்த தேர்வு குறித்த மேலும் விபரங்களுக்கு jeemain@nta.ac.in என்ற மெயிலுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version