இந்தியா

பிஜி நீட் தேர்வை அடுத்து ஜே.ஈ.ஈ தேர்வுகளும் ஒத்திவைப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருவதுமான செய்திகளை நாம் பார்த்து வருகிறோம்.

தமிழகத்தை பொருத்தவரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி பிஜி நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டன என்பதும் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் தான் அந்த தேர்வு நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஜே.ஈ.ஈ மெயின் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி முதல் நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் இந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொகரியல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு புதிய தேதி குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வ இணையதளம் மூலம் வெளியிடப்படும் என்றும் அந்த இணையதளத்தை அவ்வப்போது மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

 

 

seithichurul

Trending

Exit mobile version