இந்தியா

2021ஆம் ஆண்டின் ஜே.ஈ.ஈ தேர்வு தேதி அறிவிப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் ஒத்திவைக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வும், தமிழகம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் நீட் தேர்வு மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை என்பதும் அந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வந்தன என்பதும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் 2021ஆம் ஆண்டிற்கான ஜே.ஈ.ஈ தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதன்படி ஜே.ஈ.ஈ மூன்றாம் கட்டத் தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரையும், நான்காம் கட்டத் தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரையும் நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் அறிவித்துள்ளார்.

Trending

Exit mobile version