சினிமா

பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஓவர்! – ஜெயம்ரவின் நெகிழ்ச்சியான டிவிட்…..

Published

on

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ரகுமான், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் முதல் பாகம் அடுத்த வருடடம் வெளியாகவுள்ளது. ஜெயம் ரவி இப்படத்தில் அருள்மொழி வர்மன் ராஜராஜா வேடத்தில் நடித்துள்ளார்.
jayam ravi
இந்நிலையில், முதல் மற்றும் 2ம் பாகத்தில் தனது காட்சிகள் முடிந்துவிட்டதாக நடிகர் ஜெயம்ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், உங்களின் ஆசிர்வாதத்திற்கு நன்றி சார். என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கும் நன்றி. உங்களுடன் இனிமேல் செட்டில் இருக்க முடியாது. அதை மிஸ் செய்கிறேன். மீண்டும் உங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார். இப்படத்தின் இயக்குனர் மணிரத்னத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.  2 பாகத்திலும் தனது காட்சி முடிந்துவிட்டது என அவர் கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version