சினிமா

ஓடிடி-யில் ரிலீசாகும் ‘பூமி’ – ஜெயம் ரவி உருக்கம்

Published

on

ரோமியோ ஜலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பூமி’. கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய இப்படத்தின் அனைத்து சிக்கல்களும் சமீபத்தில் தான் சரி செய்யப்பட்டது. தவிர, ஜெயம் ரவியின் ’25’வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இமான் இசையமைத்துள்ள இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில் அதை படக்குழு உறுதி செய்துள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பொங்கல் தினத்தில் ‘பூமி’ திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது நீண்ட திரைப்பயணம் முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால் ஆனது. நீங்கள் அளித்த அளவற்ற அன்பு என்மேல் நீங்கள் வைத்த மிகப்பெரும் நம்பிக்கை, நீங்கள் அளித்த உத்வேகம் தான், சிறப்பான படங்களில் நான் பணியாற்ற காரணம். எனது கடினமான காலங்களில் என்னை உங்களின் சொந்த ரத்தம் போலவே நினைத்து ஆதரவளித்தீர்கள்.

உங்களின் இந்த ஆதரவோ, சினிமா மீதான எனது காதலை நிலைபெற செய்தது. நீங்கள் இல்லாமல் என்னால் இத்தனை தூரம் வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடும்பத்தினராகவே கருதுகிறேன் ‘பூமி’ திரைப்படம் எனது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல். இந்தப் படம் எனது திரைப்பயணத்தில் 25-வது படம் என்பதைத் தாண்டி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். கோவிட் -19 காலத்தில் ரிலீஸாகும் படங்களின் வரிசையில் இந்தப் படமும் இணைந்திருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் இணைந்து உங்களின் 2021 பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். நிறைய பண்டிகை காலங்களில் திரையரங்கில் வந்து எனது திரைப்படத்தைப் பார்த்து பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள். இந்த பொங்கல் பண்டிகை தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களை சந்திப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அச்சு அசலாக MGR போலவே இருக்கும் அரவிந்த்சாமி – இது வைரல் ரகம் #Thalaivi

seithichurul

Trending

Exit mobile version