தமிழ்நாடு

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வரலாம்: ஜெயக்குமார் மீண்டும் அதிரடி!

Published

on

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவானது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் ஓபிஎஸ். தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் நேன்று அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

#image_title

இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றை தலைமை அதிமுக தான் இனிமேல் என்பது உறுதியாகிவிட்டது. இந்த தீர்ப்பின் வெற்றியை எடப்பாடி பழனிசாமி தரப்பு கொண்டாடி வருகிறது. இனிமேல் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என அவரது ஆதரவு நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் இன்று அடையாளம் இல்லாதவராக மாறியுள்ளார். ஓபிஎஸ் எத்தனை முறை முயற்சித்தாலும் இறுதி வெற்றி எங்களுக்கு தான். ஈபிஎஸ் தலைமையில் வெற்றி பயணம் தொடரும். ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர மற்றவர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வரலாம் என்று கூறினார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version