தமிழ்நாடு

அண்ணாமலை என்ன அதிமுக அட்வைசரா? ஆவேசமான முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!

Published

on

அண்ணாமலை என்ன அதிமுக அட்வைசரா? என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆவேசத்துடன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற குரல் தற்போது அதிமுகவின் முன்னணி தலைவர்கள் மத்தியிலேயே இடம்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டால் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று அவர் சசிகலாவை மறைமுகமாக குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ’அதிமுக ஒற்றுமையாக இருக்க சசிகலாவையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு ஆவேசமாக பதில் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ‘அண்ணாமலை என்ன அதிமுகவின் அட்வைசரா? சசிகலாவை பாஜக வேண்டுமானால் சேர்த்து கொள்ளட்டும், அண்ணாமலை அவரது வேலையை மட்டும் பார்த்தால் நல்லது’ என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version