தமிழ்நாடு

திமுக கொடுத்த மனஉளைச்சல்… ஜெ., உடல்நலம் குன்றியது அதனால்தான்: ஜெயக்குமாரின் புது விளக்கம்!

Published

on

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுகவும் திமுகவும் மீண்டும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. 

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது திமுகதான். கருணாநிதியும் ஸ்டாலினும் தான் ஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்கள்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதற்குக் கொதிப்படைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் – சொல்லும் அத்தனையும் பொய்யாகவே, ‘பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா’ என்று கிராமங்களில் சொல்வார்கள் – அதுபோல பொய்களையே செய்திகளாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் கலைஞரும் – மு.க.ஸ்டாலினும் தான் என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 10 ஆண்டுகாலத்தில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அவர் உடல்நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்தில் அவர் உடல்நலத்தைப் பற்றி வெளியில் சொல்வதற்குக் கூட துப்பற்ற ஆட்சியைத்தான் இவர் நடத்திக் கொண்டிருக்கிறார்’ என்று கடுமையாக விமர்சித்தார். 

முதல்வரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் தற்போது பேசியுள்ள தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘முதல்வர், ஜெயலலிதாவுக்கு திமுக கொடுத்த மனஉளைச்சல் காரணமாகத் தான் உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்றார். அதனால் தான் அவர் மரணம் அடையும் சூழலும் ஏற்பட்டது. எனவே முதல்வர் கூறிய கருத்தில் எந்தத் தவறும் இல்லை’ என்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version