தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு புதிய பெயர்: வானிலை ஆய்வு மையம்!

Published

on

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் வங்ககடலில் நான்கு காற்றழுத்த தாழ்வுகள் உருவானது என்பதும் இதில் 3 காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தது என்பதும் இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் அந்தமான் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இதனை அடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கும் காற்றழுத்த மண்டலம் புயலாக மாறினால் அந்த புயலுக்கு ’ஜாவத்’ என்று பெயர் வைக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ’ஜாவத்’ புயல் ஆந்திர மாநிலம் மற்றும் ஒடிசா நோக்கி நாளை மறுநாள் நகரக் கூடும் என்றும் இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழக கடற்கரையோரம் உள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. இந்த ’ஜாவத்’ புயல் எந்த திசையை நோக்கி துல்லியமாக நகரும் என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தகவல் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version