சினிமா செய்திகள்
வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரபல நடிகை: விமான நிலையத்தில் சுற்றி வளைத்த அதிகாரிகள்!
![Jaqualine - Bhoomitoday Jaqualine](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/Jaqualine-stopped.jpg)
பிரபல நடிகை ஒருவர் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் சுற்றி வளைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் கோடிக்கணக்கில் மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் நெருக்கமாக இருந்தார் என்றும், சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் அளித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களை விசாரணை செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பியது மட்டுமின்றி அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவுட்லுக் நோட்டீஸ் ஒன்றையும் பிறப்பித்தனர்.
இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று துபாய் செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து அவரிடம் அவுட்லுக் நோட்டீசை காண்பித்து வெளிநாடு செல்லக் கூடாது என தடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு ரூபாய் 10 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி இருப்பதாகவும் இதில் விலை உயர்ந்த குதிரை, பூனைகளும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இன்னொரு நடிகையான நோரா பதாஹி என்பவருக்கும் பிஎம்டபிள்யூ காரை சுகேஷ் சந்திரசேகர் பரிசளித்து இருப்பதாக கூறப்படுவதால் அவர் மீதும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.