Connect with us

சினிமா செய்திகள்

வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரபல நடிகை: விமான நிலையத்தில் சுற்றி வளைத்த அதிகாரிகள்!

Published

on

Jaqualine

பிரபல நடிகை ஒருவர் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் சுற்றி வளைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் கோடிக்கணக்கில் மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் நெருக்கமாக இருந்தார் என்றும், சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் அளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களை விசாரணை செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பியது மட்டுமின்றி அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவுட்லுக் நோட்டீஸ் ஒன்றையும் பிறப்பித்தனர்.

இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று துபாய் செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து அவரிடம் அவுட்லுக் நோட்டீசை காண்பித்து வெளிநாடு செல்லக் கூடாது என தடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு ரூபாய் 10 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி இருப்பதாகவும் இதில் விலை உயர்ந்த குதிரை, பூனைகளும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இன்னொரு நடிகையான நோரா பதாஹி என்பவருக்கும் பிஎம்டபிள்யூ காரை சுகேஷ் சந்திரசேகர் பரிசளித்து இருப்பதாக கூறப்படுவதால் அவர் மீதும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வணிகம்59 நிமிடங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா11 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்12 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா13 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!