தமிழ்நாடு
ஜனவரி 26ல் கிராம சபை கூட்டங்கள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு!
![grahma sabai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/grahma-sabai-scaled.jpg)
தமிழகத்தில் கிராம சபை கூட்டம் ஜனவரி 26ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் அந்தக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கிராம சபை கூட்டம் என்பது ஜனவரி 26ஆம் தேதி இந்திய குடியரசு நாள், மே ஒன்றாம் தேதி தொழிலாளர் நாள், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் மற்றும் காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 ஆகிய நான்கு நாட்களில் நடைபெறும்.
ன்பதும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களால் இந்த கூட்டம் கூட்டப்படும் என்பதும் இந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, கவர்ச்சித் திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல், பொதுமக்களின் பங்களிப்பு உள்ளிட்டவை ஆலோசிக்கப்படும்.
கிராம மக்களின் கையில் அதிகாரம் இருப்பதை இந்த கிராமசபை கூட்டங்கள் தான் உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கிராம சபை கூட்டம் நடத்தியே ஆகவேண்டும் என்று வலுவாக குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த கூட்டம் ரத்து குறித்து என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.