சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜனனி இன்று வெளியேறும் – வீடியோ!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகப் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது.இந்தப் போட்டியில் பிக்பாஸ் வீட்டில் எந்தத் தொடர்பும் இன்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸின் விதி.

ஆரம்பத்தில் 16 பேர் இருந்தார்கள். நடுவில் 1ஒருவர் வருகையால் 17 பேர் இருந்த நிலையில், ஒரு வாரத்திக்கு ஒருவர் வெளியே சென்ற நிலையில் தற்போது நடிகை ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா ஆகிய 4 போட்டியாளர்களாக மட்டும் தான் உள்ளனர்.

இதனிடையே மக்கள் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு வாக்களித்து வருவதை அவ்வப்போது நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதில் தொடர்ந்து நடிகை ரித்விகா முதலிடம் வகிக்கிறார். இரண்டாவதாக நடிகை ஐஸ்வர்யாவும், மூன்றாவதாக விஜயலட்சுமியும் இடம்பெற்றுள்ளனர். இதில் கடைசி இடத்தில் நடிகை ஜனனி உள்ளார்.

சமீபத்தில் வெளியேற்றப்பட்ட ரம்யா, வைஷணவி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறுவது என்பது பற்றிக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்றோ அல்லது நாளையோ பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் உறுதியாக வெளியேற்றப்படுவார் எனத் தெரிய வந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version