டிவி
செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கம்.. லைவில் கதறி அழுத ஜனனி!
மாப்பிள்ளை, செம்பருத்தி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி.
ஜனனி ஒரு அழகுக் குறிப்பு மற்றும் பேஷன் டிசைன் வல்லுநர். இவர் சமுக வலைத்தளங்களில் அழகுக் குறிப்புகள் போன்றவற்றை லைவாக சொல்லியும் வருகிறார். இவரது அழகு குறிப்புகளுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமும் உள்ளது.
அண்மையில் இவர் லைவாக தனது சமூக வளைத்ததில் பேசும் போது, இவருக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய உடன் ஜன்னி கதறி அழுதார்.
என்னவனது என்று அவரது சமூக வலைத்தள ரசிகர்கள் அதிர்ச்சியடைய, செம்பருத்தி சீரியலில் இருந்து அவர் திடீரென்று நீக்கப்பட்டுள்ளார் என்று போன் காலில் கூறியுள்ளனர்.
பின்னர் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கூற, தனக்கு செம்பருத்தி சீரியல் மிகவும் பிடித்த ஒன்று, அதிலிருந்து திடீரென என்னை நீக்கியுள்ளனர். சீரியல் குழுவினரை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். மீண்டும் வேறு ஒரு சீரியலில் உங்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
ஜனனி இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடித்த ஒரு நடிகையையும், நீக்கி அது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.