Connect with us

இந்தியா

காஷ்மீர் ஆளுநரை திட்டியவர்கள் இன்று பாராட்டுகிறார்கள்!

Published

on

உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மெகபூபா ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயன்றபோது அம்மாநில சட்டசபையை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்து உத்தரவிட்டார். அப்போது அவரை பலரும் விமர்சித்தனர். ஆனால் அன்று விமர்சித்தவர்கள் அவரது நடவடிக்கையை இன்று பாராட்டுகிறார்கள்.

எம்எல்ஏக்கள் குதிரை பேரம், எதிர் சித்தாந்தங்கள் உள்ள கட்சிகள் இணைவது மூலம் நிலையான ஆட்சியைத் தர முடியாது போன்றவற்றையும் ஆளுநர் காரணமாகக் கூறி சட்டசபையை கலைத்தார். இதனை ஏற்காத உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேற்று பேசிய ஆளுநர் சத்யபால் மாலிக், ஆட்சி அமைக்க மெகபூபா முஃப்தி உரிமை கோரிய தினம் விடுமுறை நாளாகும். அவர்கள் என்னை ஃபேக்ஸ் இயந்திரத்தின் அருகில் எப்போதும் இருப்பேன் என்று நினைத்தார்களா என்பது தெரியவில்லை. மெகபூபாவும், உமர் அப்துல்லாவும் இணைந்து ஆட்சி அமைப்பதில் முனைப்புடன் இருந்திருந்தால், முன்னரே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துபடி, பேரவையைக் கலைப்பதற்கு முன்பு, குடியரசுத் தலைவரிடமோ, நாடாளுமன்றத்திடமோ நான் முன் அனுமதி பெற வேண்டியதில்லை. மத்திய அரசின் விருப்பத்தின்படி சஜ்ஜத் லோனேவை முதல்வராக்கியிருந்தால், நேர்மையற்ற மனிதராக வரலாற்றில் இடம்பெற்றிருப்பேன். என்னைத் தவறாக நினைத்தாலும் கவலையில்லை. நான் செய்தது சரி என்றே கருதுகிறேன் என்றார்.

இதற்கு மெகபூபா தற்போது பாராட்டை தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து வரும் உத்தரவை ஆளுநர் பின்பற்ற மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை மாநிலத்தில் ஜனநாயகத்தைக் கொடுத்துள்ளது என மெகபூபா டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அதேப்போல உமர் அப்துல்லா தனது டுவிட்டரில், குதிரை பேரம், பணம் ஆகியவற்றின் மூலம் பாஜக ஆட்சி உருவாக்க இருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தியதற்காக ஆளுநருக்கு வாழ்த்துகள் என்றார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!