சினிமா செய்திகள்

ஜேம்ஸ்பாண்ட் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

உலக அளவில் பெரும் வரவேற்ப்பை பெறும் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் அடுத்த படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ரகசிய உளவாளி என்ற கற்பனைப் பாத்திரம் தான் ஜேம்ஸ் பாண்ட் என்பதும், இந்த ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை வைத்து இதுவரை 24 படங்கள் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜேம்ஸ்பாண்டின் 25வது படம் ’நோ டைம் டு டை’ என்ற படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்களாக திரையரங்குகள் திறப்பதற்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டேனியல் கிரேக் ஜேம்ஸ்பாண்டாக நடித்திருக்கும் இந்த படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் முதல்கட்டமாக சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், தென் கொரியா நாடுகளில் வெளியாக இருப்பதாகவும் இதனை அடுத்து அடுத்த கட்டமாக செப்டம்பர் 30ஆம் தேதி ஆஸ்திரியா, ஜெர்மனி, டென்மார்க், பிரேசில், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அக்டோபர் 1ஆம் தேதி ஜப்பான், ஸ்பெயின், பல்கேரியா ஆகிய நாடுகளிலும், அக்டோபர் 8ஆம் தேதி அமெரிக்கா, இந்தியா உட்பட சில நாடுகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் உலகின் பல நாடுகளில் திரையரங்குகள் திறந்தாலும் சரியான படம் வெளிவராததால் திரையரங்குகளில் கூட்டம் இல்லை. ஆனால் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளிவந்தால் திரையரங்குகளில் திருவிழா கோலம் ஏற்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version