செய்திகள்

அவனியாபுரத்தில் துவங்கியது ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்கள் உற்சாகம்…

Published

on

மாடுகளை வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழகத்தில் பல வருடங்களாகவே நடக்கும் நிகழ்ச்சியாகும். இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டம் மூலம் அரசு ஜல்லிக்கட்டை சட்டமாக்கியது.

ஆனால், கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸ் பாதிப்பும் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த வருடமும் வீரர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டை காண உள்ளூரை சேர்ந்த 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்களும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version