செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி ரத்து… அதிர்ச்சியான மாடுபிடி வீரர்கள்….

Published

on

ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்று. பல வருடங்களாக இந்த விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டம் மூலம் அரசு ஜல்லிக்கட்டை சட்டமாக்கியது.

ஆனால், கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸ் பாதிப்பும் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த வருடமும் வீரர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், கொரொனா வைரஸ் பரவலை காரணம் காட்டி பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி பகுதியில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கு வருகிற திங்கள் கிழமை (17.01.2022) அன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்ட்டுள்ளது. கடந்த வருடமும் கொரொனாவால் இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், அப்பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version