சினிமா செய்திகள்

ஓடிடி ரிலீஸ் இல்லை: சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

Published

on

சூர்யா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் ஒன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் என தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெய்பீம்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக முதலில் கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இயக்குனர் அளித்த பேட்டியில் சூர்யா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றும் அவருடைய அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வில்லை என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1993ஆம் ஆண்டு பழங்குடியின பெண் ஒருவருக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி கேட்டு நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர் கேரக்டரில் சூர்யா நடித்துள்ளார் என்பதும் இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்ற சூழல் இருப்பதை அடுத்து இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யலாம் என்றும் சூர்யா அறிவுறுத்தியதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர்கள் இந்த பட

Trending

Exit mobile version