தமிழ்நாடு

30 தொகுதிகளை திமுக பிடிக்கும்… இல்லையேல் தற்கொலை செய்வேன்- ஜெகத்ரட்சகன் ஆவேச பேட்டி

Published

on

புதுச்சேரியில் திமுக 30 தொகுதிகளிலாவது வெற்றி பெறச் செய்வேன். இல்லையேல் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேசமாகப் பேசி உள்ளார்.

திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் புதுச்சேரியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் பிரசாரப் பணிகளை புதுச்சேரியில் துரிதகதியில் மேற்கொண்டு வருகிறார் ஜெகத்ரட்சகன். தொடர்ந்து பல கூட்டங்களில் பங்கேற்று பேசி வருபவர் மேடை ஒன்றில் பேசுகையில், “புதுச்சேரி பூமி சொர்க்க பூமியாக விளங்கி வந்தது. தற்போது நகரமயமாதலால் அதிகப்படியாகவே மாறிவிட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில் பல வித முயற்சிகள் தடைபட்டு உள்ளன. பல்வேறு கட்ட கட்டமைப்புகளும் முடங்கி உள்ளன. வளர்ச்சித் திட்டங்கள் எதுவுமே செயல்படுத்தப் படவில்லை. புதுச்சேரியில் திமுக அதிக இடங்களில் வென்றால் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். புதுச்சேரியில் திமுக-வை நிச்சயமாக 30 இடங்களில் வெற்றி பெறச் செய்ய வைப்பேன். இல்லையேல் மேடையிலேயே நான் தற்கொலை செய்து கொள்வேன்” என ஆவேசமுடன் பேசி உள்ளார்.

புதுச்சேரியில் ஜெகத்ரட்சகன் பேசியது காங்கிரஸ்- திமுக இடையே ஏற்பட்டுள்ள விரிசல் ஆகத் தெரிவதாக என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றன.

Trending

Exit mobile version