கிரிக்கெட்

அடுத்த ஆண்டும் சிஎஸ்கேவுக்கு ஜடேஜா ஆட மாட்டார்: கிரிக்கெட் பிரபலத்தின் திடுக் தகவல்

Published

on

சிஎஸ்கே அணியின் வீரர்களில் ஒருவரான ஜடேஜா அடுத்து வரும் மூன்று லீக் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணிக்காக அடுத்த ஆண்டும் ஜடேஜா விளையாட மாட்டார் என கிரிக்கெட் பிரபலம் ஒருவர் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா இதுகுறித்து கூறிய போது ’சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது என்பதை வெளியே யாருக்கும் சொல்ல மாட்டார்கள். ஒரு வீரர் காயம் அல்லது அவரை அணியில் இறக்க விரும்பவில்லை என்பதை எதையும் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்.

கடந்த ஆண்டு சுரேஷ் ரெய்னாவுக்கு நடந்தது தான் இந்த ஆண்டு ஜடேஜாவுக்கு நடந்துகொண்டிருக்கிறது. சுரேஷ் ரெய்னாவை எப்படி திடீரென அம்போவென விட்டார்களோ அதேபோல் இந்த் தடவை ஜடேஜாவை அம்போ என விட்டு விட்டார்கள்.

ஜடேஜாவுக்கு காயம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவரை அணியினர் ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் ஜடேஜாவை அன்ஃபாலோ செய்திருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Trending

Exit mobile version