தமிழ்நாடு

தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

Published

on

சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழகத்தில் போராடுவோம் என்று அறிவித்து இருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகத்தில் மிகவும் கொதிப்பான நிலை உருவாகி இருக்கிறது. கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டத்திற்கு இன்னும் வேறு சில அரசு ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். நீதித்துறை பணியாளர்களும், தலைமைச் செயலக ஊழியர்களும் இந்த போராட்டத்திற்கு அளித்தனர்.

இந்த நிலையில் தலைமைச் செயலக ஊழியர்கள் மூலம் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் இன்று மாலை இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த ஆலோசனையின் முடிவில், தலைமைச் செயலக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறியவித்துள்ளனர். இன்று நடந்த போராட்டம்தான் கடைசி என்று தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version