தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் தொடங்கியது.. முக்கிய முடிவு?

Published

on

சென்னை: அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்து வருகிறது.

ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் எந்த பாதிப்பும் இன்றி நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் 3500 ஊழியர்களுக்கும் அதிகமானோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடந்து வருகிறது. ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

தற்போது நடக்கும் இந்த ஆலோசனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். போராட்டத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version