தனியார் வேலைவாய்ப்பு
Freshers-க்கு அடித்தது ஜாக்பாட்.. 40,000 ஊழியர்களை பணிக்கு எடுக்கும் டிசிஎஸ்!
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் 5,09,058 ஆக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வியாழக்கிழமை காலாண்டு அறிக்கையை வெளியிட்ட போது தெரிவிக்கப்பட்டு இருந்தது. சென்ற ஆண்டு மட்டும் 40 ஆயிரம் ஊழியர்களை வளாக நேர்காணல் மூலமாக டிசிஎஸ் பணிக்கு எடுத்துள்ளது.
இப்போதும் நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் நபர்களை வளாக நேர்காணல் மூலம் பணிக்க எடுக்க உள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் காலாண்டு அறிக்கை
ஒவ்வொரு ஆண்டும் டிசிஎஸ் நிறுவனத்தில் சராசரியாக 17.3 சதவீதம் வரையில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தமாக 5,09,058 ஊழியர்கள் தற்போது வேலை செய்து வருகின்றனர்.
டிசிஎஸ் நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் வெளியேறும் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக 8.6 சதவீதமாக உள்ளது. ஐடி துறையில் இது மிகவும் குறைவு.
காலாண்டு லாபம் சராசரியாக 29 சதவீதம் அதிகரித்து வருகிறது. கொரோனா 19 காரணமாக அதிகரித்துள்ள டிஜிட்டல் தேவை காரணமாக ஐடி சேவைகள் தேவை அதிகரித்துள்ளது. டிசிஎஸ் நிகர லாபம் 9,008 கோடி ரூபாய். சென்ற ஆண்டு இதே காலாண்டில் நிகர லாபம் 7,008 கோடியாக இருந்தது.
டிசிஎஸ் நிறுவன வருவாய் 18.5 சதவீதம் அதிகரித்து 45,411 கோடி ரூபாயாக உள்ளது.