உலகம்
கொரொனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஜாக் மா நிதியுதவி!
சீனாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் மற்றும் அலிபாபா நிறுவனத்தின் தலைவருமான ஜாக் மா, கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிக்க 103 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக சீனாவில் இருந்து பரவி வரும் கொரொனா வைரஸ் உலக மக்களை பீதியடைய செய்துள்ளது.
கொரொனா வைரஸ் தாக்குதலினால் சீனாவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இந்த வைரஸ்க்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பார்மா நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
எனவே இந்த தடுப்பூசியை விரைந்து கண்டுபிடிக்க இரண்டு சீன பார்மா நிறுவனங்களுக்கு, ஜாக் மா ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் 103 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.