உலகம்
இந்தியா வந்த இவான்கா ட்ரம்ப் – மோடியுடன் சிறப்பு விருந்து எங்க தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தபோது, சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள இவான்காவுக்கு அழைப்புவிடுத்தார். அவரின் அழைப்பை ஏற்ற இவான்கா, தற்போது இந்தியா வந்துள்ளார்.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த இவான்காவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இவான்காவின் வருகையையொட்டி ஹைதராபாத் நகரம் முழுதும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில், இன்று நடைபெற்ற சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாடு (Global Entrepreneurship Summit) மாநாட்டில், அமெரிக்கா சார்பில் இவான்கா ட்ரம்ப் கலந்து விழாவில் கலந்துகொள்கிறார்.
நிஜாம் அரண்மனையில் இன்று இரவு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இவான்கா ட்ரம்ப் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.