Connect with us

தமிழ்நாடு

என்ன ஆனாரோ தெரியவில்லையே.. 6 நாட்கள் ஆகிவிட்டது.. எங்கே சென்றார் முகிலன்?

Published

on

சென்னை: முகிலன் எங்கே சென்றார், அவருக்கு என்ன ஆனது, உயிரோடு இருக்கிறாரா? இதுதான் தற்போது தமிழகத்தில் தற்போது மிக முக்கிய கேள்வியாக மாறி இருக்கிறது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன் காணாமல் போய் இன்றுடன் 6 நாட்கள் ஆகிவிட்டது. சென்னையில் ”பிரஸ் மீட்டில்” கலந்து கொள்வதற்காக வந்தவர் எங்கே போனார் என்று தெரியவில்லை.

போலீஸ் கைது செய்து சென்றதா, எதிரிகள் கடத்தி சென்றார்களா, காணாமல் போனாரா, கொல்லப்பட்டாரா என்று எந்த தகவலும் தெரியாமல் அவருக்கு நெருக்கமானவர்கள் கடும் சோகத்தில் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன் பல அடையாளங்களை கொண்டவர். சிறு வயதில் இருந்தே மக்களுக்காக போராடியவர், ஸ்டெர்லைட், சேலம் 8 வழி சாலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், தாது மணல் கொள்ளை, மணல் கொள்ளை, நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று மக்களுக்கு எதிரான அனைத்து பிரச்சனைக்கும் எதிராக குரல் கொடுத்து போராடி இருக்கிறார்.

முக்கியமாக ஸ்டெர்லைட்டிற்கு எதிராக இவர் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தார். கட்டுரைகள் மூலம், ஆவணங்கள் மூலம் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் நடந்த கலவரங்களையும், அதன் உண்மை பின்னணியையும் தொடர்ந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டே இருந்தார். இதனால் பல முறை முகிலன் தமிழக போலீசால் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் கடந்த 15ம் தேதி சென்னையில் முக்கியமான பிரஸ் மீட் ஒன்றை அவர் நடத்தினார். ‘கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற பெயரில் அவர் முக்கிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இதில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் நடந்தது என்ன, யார் கலவரத்தை உருவாக்கியது, மக்களா, அடியாட்களா என்று உண்மைகளை தெரியப்படுத்தி இருந்தார். அதோடு தென் மண்டல காவல்துறை ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

ஜோதிடம்59 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!