செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிவிப்பு

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் தற்போதுதான் மழை ஓரளவுக்கு குறைந்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் டிச.17 வரை மேலும் 5 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், பலத்த காற்று வீசும் என்பதால் கன்னியாகுமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version