செய்திகள்
19 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!…வானிலை மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று புயல் ஒன்று சென்னை அருகே கரையை கடந்ததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இது ஒருபுறம் இருக்க, நாளையும் ஒரு புயல் உருவாகவுள்ளது. வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் வட மேற்கில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு வடமேற்கே நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், எனவே அடுத்த 48 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுவடையும் என்றும் அதன் பின்னர் பாதிப்பு குறித்த நிலவரம் குறித்து கணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இன்று கன்னியாகுமாரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென் காசி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி ஆகிய மவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் எனவும், நாளை மறுநாள் அதாவது நவம்பர் 14ம் தேதி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.