தமிழ்நாடு
அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பரின் வீட்டில் ஐடி ரெய்டு: பெரும் பரபரப்பு
அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பரின் வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சோத்துப்பாளையம் முருகேசன் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்
புதுக்கோட்டை எழில் நகரில் உள்ள முருகேசன் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், விரைவில் அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட தொகை குறித்த விபரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நேற்று இதே தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது என்பதும், ரூ.1.50 லட்சத்துடன் அதிமுக நிர்வாகி ஒருவர் பறக்கும் படையினர்களிடம் பிடிபட்டதாகவும் கூறப்படுகிறது.