சினிமா செய்திகள்

கணக்கு காண்பிக்காத ஏஜிஎஸ்; சிக்கிய விஜய்.. என்ன காரணம்?

Published

on

விஜய் தற்போது திருநெல்வேலியில் மாஸ்டர் திரைப்படப் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

இன்று காலை முதல் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை செய்து வந்தனர்.

அதில் சில ஆவணங்களில் மோசடி நடைபெற்றுள்ளதாக வருமான வரி துறைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆவணங்கள் பிகில் திரைப்படத்துடனும், அதற்காக விஜய் பெற்ற சம்பளத்திற்கும் தொடர்புடையது என கருதப்பட்டுள்ளது.

உடனே திருநெல்வேலியில் படப்பிடிப்பில் உள்ள விஜயை சந்தித்த வருமான வரித்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுவே மாஸ்டர் திரைப்படத்தில் படப்பிடிப்பு தடைப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

விஜய்யை ஷூட்டிங் ஸ்பாட் சென்று விசாரித்தது மட்டுமல்லாமல், அவரது வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version