செய்திகள்

சென்னையில் 2 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் அறிவிப்பு….

Published

on

சில நாட்களுக்கு முன்பு எப்போதும் பெய்திராத வகையில் சென்னையில் மழை கொட்டோ கொட்டு என கொட்டியது. இதை வானிலை மையம் கூட கணிக்க முடியவில்லை.

சென்னையின் பல பகுதிகள் நீரில் முழ்கியது. பள்ளமான பகுதிகளில் இருந்த வீடுகளில் மழை நீர் புகுந்தது. சுரங்க பாதைகள் நீரில் மூழ்கியது. ஒரு கி.மீ தூரமுள்ள வீட்டிற்கு வாகனத்தில் செல்ல 2 மணி நேரம் ஆகியது.

rain

இந்நிலையில், தற்போது சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், தமிழக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஓரிசு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version