Connect with us

இந்தியா

இந்து கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கி மத நல்லிணக்கத்திற்கு வித்திட்ட பாட்ஷா பாய்!

Published

on

பெங்களூரூவில் இந்து கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள இடத்தை தானமாக வழங்கி, மதநல்லினக்கத்துக்கு வித்திட்டுள்ளார் இஸ்லாமியர் ஒருவர்.

பெங்களூரு புறநகர் பகுதியில், ஓல்டு மெட்ராஸ் சாலையில் உள்ளது காடுகொடி பெலதூர். அங்கு வாடகை லாரி வணிகம் செய்து வருகிறார் எச்.எம்.பாட்ஷா.

இவருக்குப் பெங்களூருவிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒசகோட்டே பகுதியில், 3 ஏக்கர் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்துக்கு அருகில் இருக்கும் ஒரு ஆஞ்சினேயர் கோவிலுக்கு நீண்ட காலமாகச் சென்று வர பாதை வசதி இல்லாமல் இருந்தது.

பாட்ஷா பாய் நிலம் கொடுத்தால், அந்த கோவிலுக்கு சென்ற வர வழி கிடைக்கும். எனவே பாட்ஷாவிடம் 1.5 செண்ட் நிலத்திற்குப் பணம் வழங்குவதாகவும், கோவில் சென்று வர பாதைக்கு உதவ வேண்டும் என்றும் பாட்ஷாவிடம் கேட்டுள்ளனர்.

உடனே அதற்கு ஒப்புக்கொண்ட பாட்ஷா, 1.5 செண்ட் இடத்தை கோவிலுக்கு தானமாக வழங்க முன்வந்துள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அந்த இடத்தின் இன்றைய சந்தை மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு செல்லும் என்று கூறப்படுகிறது. பாட்ஷா பாய் எடுத்த முடிவை பார்த்த மக்கள் அவரை சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய பாட்ஷா, “இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்ற பாகுபாடு யாரிடமும் பார்க்கக் கூடாது. இப்படி பாகுபாடுகள் இருந்தால் நாடு முன்னேறுமா? சில அரசியல் தலைவர்கள் மக்களிடையே பிரிவை உண்டாக்கு சாதி, மத அரசியல் தலைவர்கள் மக்களிடையே பிரிவை உடாக்கி, சாதி, மத அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். நாம் ஒற்றுமையாக இருந்தால் நாடு முன்னேறும். அதனால் நம் நாட்டை நேசிக்க வேண்டும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் எனது நிலத்தை ஆஞ்சிநேயர் கோவிலுக்குத் தானமாக வழங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்15 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!