சினிமா

மீண்டும் படம் இயக்கும் ரஜினி மகள்… ஹீரோ அவர் இல்லையாம்!….

Published

on

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஏற்கனவே தனுஷை வைத்து 3 என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் 2012ம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட். குறிப்பாக ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உலகமெங்கும் பிரபலமடைந்தது.

இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இப்படத்தில் தனுஷும் -ஸ்ருதிஹாசனும் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷின் நண்பனாக நடித்திருப்பார்.

இப்படத்திற்கு பின் ‘வை ராஜா ’வை என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. 2015ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆனால், இப்படம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் 6 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் ஐஸ்வர்யா. லைக்கா தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு சஞ்சீவ் என்பவர் கதை எழுதியுள்ளார். இந்த தகவலை லைக்கா நிறுவனமே டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதேநேரம், இப்படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பில்லை எனத்தெரிகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத்தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version