கிரிக்கெட்

சூப்பர்.. 4வது டெஸ்டில் இந்திய அணியில் இணையும் மாஸ் வீரர்.. ஆஹா பேட்டிங் ஆர்டரே மாறுதே

Published

on

சென்னை: இந்திய அணியில் 4வது டெஸ்ட் போட்டியில் இஷான் கிஷன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்திய அணியின் இந்த கட்டாயத்திற்கு பின் முக்கியமான காரணம் உள்ளது. அதன்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் வெல்ல வேண்டும்.

இல்லையென்றால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும். பிற அணி அணியை சார்ந்து இருப்பதற்கு பதிலாக நாமே வெல்வதே சிறப்பாக ருக்கும்.

இதனால் தற்போது நடந்து வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. விறுவிறுப்பான இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த 3 போட்டிகளில் இந்திய அணியில் கீப்பராக ஸ்ரீகர் பரத் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் இவர் சரியாக ஆடுவது இல்லை.

கடந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் இன்னிங்சில் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். கீப்பிங் நன்றாக செய்தாலும் இவரின் பேட்டிங் மோசமாக உள்ளது. இதனால் 4வது போட்டியில் இஷான் கிஷான் இந்திய அணியில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version