கிரிக்கெட்

தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடரா? தோனியின் ருசிகர பதில்!

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்பட்டு வருகிறார். இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது. இருப்பினும், தனது ஓய்வு குறித்து தல தோனி இதுவரையிலும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோனிக்கு கடைசி ஐபிஎல்

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்ட போது அதில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். டாசின் போது தொகுப்பாளர் டேனி மோரிசன், தோனியிடம் இது உங்களின் கடைசி ஐபிஎல் தொடர்; மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைகிறீர்களா? எனக் கேட்டார்.

அடுத்த ஐபிஎல்-ல் தோனி

அதற்கு பதிலளித்த தோனி, “இது தான் எனது கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்து உள்ளீர்கள். இருப்பினும், நான் அதை முடிவு செய்யவில்லை” என கூறினார்.

உடனடியாக டேனி மோரிசன் தோனியைப் பார்த்து நீங்கள் அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்று விளையாடுவீர்கள் என எனக்குத் தெரியும் என்றார். பிறகு மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி பேசிய டேனி மோரிசன், “தோனி மீண்டும் வருவார்; தோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க நிச்சயம் வருவார்” என்று கூறினார்.

Trending

Exit mobile version