தமிழ்நாடு

பிளஸ் டூ தேர்வு தேதிகளில் மாற்றமா? – அமைச்சர் சொன்ன தகவல்

Published

on

தமிழகத்தில் கல்வி பயின்று வரும் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்வு தேதிகளில் மாற்றம் ஏதேனும் செய்யப்படுமா என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பும் பயிலும் மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வு நடத்தப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி வரும் மே மாதம் 3 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது. மே மாதம் 21 ஆம் தேதி கடைசித் தேர்வு முடியும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக கடந்த ஜனவரி 19 ஆம் தேதி, பொதுத் தேர்வைச் சந்திக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8 ஆம் தேதி, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

இப்படியான சூழலில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. சீக்கிரமே 10 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு நடைபெறும் கால அட்டவணை விவரம்:

இந்நிலையில் தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்குமா என்கிற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘உரிய ஆலோசனைக்குப் பின்னர் தான், தெளிவான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே பிளஸ் டூ தேர்வு தேதிகள் குறித்து எந்த வித குழப்பமுக் கொள்ளத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version